பிரித்தானியாவில் மனைவி, பிள்ளைகளை கொன்ற கொடூரன் : அதிர்ச்சி சம்பவம்!!

645


 

பிரித்தானியாவில் மனைவி மற்றும் தனது இரண்டு குழந்தைகளை Bath tub தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த பின்னர் சாவகாசமாக வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துகொண்டே சாப்பிட்ட கணவனுக்கு நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.



சமி சலீம்(30) எனும் நபர் தனது மனைவி அரினா சயீத்(30) மகள் ஷாதியா(7) மற்றும் 4 வயது மகன் ரமி ஆகியோரை கொலை செய்த பின்னர் வீடுமுழுதும் பெட்ரோல் உற்றி தீ வைத்து கொண்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கடந்த வருடம் மே 30ம் திகதி ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் இருந்து பெட்ரோல் மற்றும் எரிவாயு வாடை அதிகமாக வெளியேறியது, இதானல் அக்கம் பக்கத்தில் இருந்த குடியிருப்புவாசிகள் உடனடியாக அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.



அந்த வீடு உள்பக்கமாக தாழிட்டு இருந்ததால், சிலர் கதவை உடைத்து சென்று பார்த்த போது வீட்டின் ஒரு அறையில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் எரிந்த நிலையிலும் மற்றொறு அறையில் ஒரு நபர் மயக்க நிலையிலும் இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.



உடனடியாக அங்கு வந்த பொலிஸ் சடலங்களை கைப்பற்றி, மயக்க நிலையில் இருந்த சமி சலீம் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் விசாரனை நடத்தினர்.


விசாரணையின் போது சமீ சலீம் கொடுத்த வாக்குமூலம் அனைத்தும் அதிர்ச்சியளித்தது, இயல்பாகவே சமி சலீம் அவரது மனைவி மீது சந்தேகம் மற்றும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் மன போக்கிலேயே இருந்து வந்துள்ளார்.

இதனால் அவரது மனைவி செல்போன் பயன்படுத்தவும் வெளியே எங்கும் செல்லக்கூடாது எனவும் தடைவிதித்துள்ளார், ஆனால் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் அவரது மனைவி செல்போன் பயன்டுத்தியது சலீமுக்கு சந்தேகத்தை உண்டாக்கியது.


அதன் பின்னர் 25 லிட்டர் பெட்ரோல் வாங்கிவந்து வீடு முழுவதும் ஊற்றிவிட்டு பின்னர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் வாயை பொத்தி இழுத்துச்சென்று Bath tub தண்ணீரில் மூழ்கடித்து துடிக்கதுடிக்க கொலை செய்த பின்னர் சடலங்களை ஒரு அறையில் அடுக்கியுள்ளார்.

அதன் பின்னர் சாப்பிட்டு கொண்டே டிவி பார்த்த சலீம் இறுதியாக எரிவாயு இணைப்பையும் பிடுங்கி விட்டுவிட்டு வீட்டிற்கு தீ வைத்து தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். ஆனால் அதிக புகை ஏற்பட்ட காரணத்தினால் சலீம் இருந்த அறைக்கு தீ பரவவில்லை.

இந்த கொடூர சம்பவத்தை செய்த சலீம் schizophrenia எனும் ஒரு வித மனநோயினால் பாதிக்கப்பட்டவர் என்று அவரை கைது செய்து விசாரிக்கும் போது தெரியவந்தது. ஆனாலும், ஒரு வருடமாக நடைபெற்ற இந்த விசாரனையில் Liverpool Crown நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அதில் 3 கொலைகளை செய்துள்ள குற்றத்துக்காக சலீமுக்கு 31 ஆண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


சலீம் மனைவி அரினா சயீத் மிகவும் அமைதியானவர் மற்றும் இரக்க குணமுடையவர் என்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் ஆனால் திடீர் என இந்த கொடூர செயலில் சலீம் ஈடுபட்டது எதற்காக என தெரியவில்லை எனவும் இந்த சம்பவத்திற்கு பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.