குழந்தையின் தலையை வெட்டி கொன்று இளம் தாய் செய்த செயல் : அதிர்ச்சி சம்பவம்!!

355


இந்தியாவின் டெல்லியில் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் தனது 8 மாத குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஹரி ஷங்கர் – சரிகா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும், சிராக் என்ற எட்டு மாத ஆண் குழந்தையும் உள்ளார்கள். இந்நிலையில் வேலை முடிந்து நேற்றிரவு ஹரி வீட்டுக்கு வந்த போது வீடு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது குழந்தை சிராக்கின் தலை மட்டும் வெட்டப்பட்டு தனியாக இருந்துள்ளது.

அருகிலேயே ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுப்பட்டு கிடந்த சரிகா மீது சிராக்கின் உடல் பகுதி சடலமாக இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஹரி பொலிசுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் உயிருக்கு போராடிய சரிகாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.



விசாரணையில் சரிகா மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததும் அவரே தனது மகன் தலையை வெட்டி கொலை செய்து, தன் கழுத்தை அறுத்து கொண்டதும் தெரியவந்தது.



இதனிடையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சரிகாவின் ஒன்றரை வயது மகன் மர்மமாக இறந்துள்ளான்.


இந்த மரணம் குறித்து குடும்பத்தார் யாரும் அதிக கவனம் செலுத்தாத நிலையில், சரிகாவே அவனையும் கொலை செய்திருக்கலாம் என தற்போது தெரிவித்துள்ளனர்.