கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் போராட்டத்தில் விஜய் நற்பணி மன்றத்தினர்!!

347

 

கிளிநொச்சி மாவட்ட விஜய் நற்பணி மன்றத்தினர் கிளிநொச்சி மாவட்டத்தில் பல சமூக நற்பணி செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நற்பணி மன்றத்தின் ஊடாக இலங்கையில் இறுதிப் பேரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் இணைந்து எமது ஆதரவினை இன்று தெரிவித்து இருந்தனர். கிளிநொச்சி மாவட்டத்தில் ஈழப்போரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் பெற்றோர் தமது பிள்ளைகளை மீட்டுதர வேண்டும் என 429 நாட்களாக கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் திடலில் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்குடன் இந்த நற்பணி மன்றம் இளைஞர்களுடன் இணைத்து தமது ஆதரவை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.