நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் : சிம்பு உருக்கம்!!

378


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்டு 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தனது தந்தை குறிதது நடிகர் சிம்புவிடம் மன்சூர் அலிகானின் மகன் அழுதுள்ளார்.



இதனைத்தொடர்ந்து, மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டது குறித்து அறிவதற்காக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்ற நடிகர் சிம்பு, மன்சூருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று உருக்கத்துடன் கூறியுள்ளார், உளவுப் பிரிவு துணை ஆணையரை சந்தித்துப் பேசிய சிம்பு, பின்னர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது,

சட்டப்படிதான் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டிருப்பதாக விளக்கமளித்தனர். அது ஏற்கும்படி இருந்தது. பிரச்சினைகளை உருவாக்கும் வகையில் பேசுபவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டேன். சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.



மன்சூர் அலிகான் புதன்கிழமைக்குள் பிணையில் வெளியே வர வாய்ப்பு உள்ளது என்கின்றனர். அதுவரை காத்திருப்பேன் என கூறியுள்ளார்.