திட்டிய பெற்றோர் : வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் என்ன செய்தார் தெரியுமா?

671


 

அவுஸ்திரேலியாவில் பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி இந்தோனேசியாவுக்கு சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



குறித்த அவுஸ்திரேலிய சிறுவன் குறைந்த கட்டண விமானம் ஒன்றில் டிக்கெட் பதிவு செய்து இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சென்றுள்ளார். அங்கு நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் 4 நாட்கள் உல்லாசமாக செலவிட்டுள்ளார்.

விமான டிக்கெட் பதிவு செய்யும் முன்பாக, குறித்த 12 வயது சிறுவன் குறிந்த கட்டண விமானம் தொடர்பில் இணையத்தில் விரிவாக தகவல் திரட்டியுள்ளார். மட்டுமின்றி பெற்றோரின் அனுமதி கடிதம் இன்றி தனியாக பயணம் மேற்கொள்ளும் விமான சேவை நிறுவனத்தையும் தேடியுள்ளார்.



பின்னர் மிக குறைந்த கட்டணத்தில், பாடசாலை தினங்களில் இந்தோனேசியாவுக்கு விமான டிக்கெட் பதிவு செய்துள்ளார். பின்னர் தனது பயணத்திற்கான பெட்டியை தயார் செய்து ரயில் மூலம் விமான நிலையம் சென்றடைந்துள்ளார். சிட்னி விமான நிலையத்தில் இருந்து பெர்த் நகருக்கு சென்ற சிறுவன், அங்கிருந்து பாலி தீவுக்கு சென்றுள்ளார்.



இதனிடையே சிறுவனை காணவில்லை என அவரது பெற்றோர் புகார் செய்துள்ளனர். நான்கு நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பிய சிறுவன், தமது தாயாரின் வங்கி அட்டையை எடுத்துச் சென்று அதன் வாயிலாக அனைத்து கட்டணங்களும் செலுத்தியது தெரியவந்தது.