கனடிய நபரை அடித்தே கொன்ற கிராம மக்கள் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

581


 

பெரு நாட்டில் மூதாட்டி ஒருவரை கொலை செய்ததாக கூறி கனேடிய நபர் ஒருவரை அங்குள்ள மக்கள் அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பெரு நாட்டில் உள்ள அமேசான் பகுதியில் கிராமத்து மருத்துவராக செயல்பட்டு வருபவர் 81 வயதான Olivia Arevalo Lomas. குறித்த கிராமத்தில் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் மூதாட்டி ஒலீவியாவின் சிகிச்சை முறை மிகவும் பிரசித்தம் எனம் கூறப்படுகிறது.

இவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார் கனேடியரான Sebastian Paul Woodroffe(41). இந்த நிலையில் கடந்த வியாழனன்று ஒலீவியா மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் செபஸ்டியானுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுப்பிய கிராம மக்கள், சிகிச்சை பெற்று வந்த அவரை வலுக்கட்டாயமாக சிறை பிடித்துள்ளனர்.



பின்னர் கடுமையாக தாக்கி அவரை கழுத்தில் கயிறு கட்டி தூக்கிலேற்றியுள்ளனர். கொல்லப்பட்ட மூதாட்டி குடியிருந்த வீட்டுக்கும் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் செபஸ்டினானின் சிதைக்கப்பட்ட உடல் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.



செபஸ்டியான் மற்றும் மூதாட்டி ஒலீவியா கொலை தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், இதுவரை எவரையும் கைது செய்யவில்லை என தெரிய வந்துள்ளது.


2 கொலை தொடர்பாக உண்மையான குற்றவாளியை கைது சேய்யும் வரை இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஒலீவியாவின் இழப்பு பெரு நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமின்றி அமேசான் பகுதியை குறிவைக்கும் வெளிநாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.