வவுனியாவில் இ.போ.ச – இளைஞர்களுக்கிடையே மோதல் : மூவர் வைத்தியசாலையில்!!

439


 

வவுனியா குருமன்காடு கலைமகள் மைதானத்திற்கு அருகே நேற்று (23.04.2018) மதியம் 2 மணியளவில் இ.போ.ச ஊழியர்களுக்கும் இளைஞனுக்கும் இடையே இடம்பெற்ற கருத்து முரன்பாடு மோதலாக மாறியதில் இ.போ.ச ஊழியர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,



செட்டிக்குளத்திலிருந்து பூவரசங்குளம் ஊடாக வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்தும் அதே பாதையில் பயணித்த தனியார் பேரூந்தும் போட்டிக்கு சென்றுள்ளது. குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இ.போ.ச பேரூந்து வீதியினை விட்டு விலகி வீதியில் நடந்து சென்ற இளைஞர்களை மோதும் வகையில் சென்றுள்ளது.

இதனையடுத்து அவ் இளைஞர்கள் இ.போ.ச ஊழியர்களை பார்த்து திட்டியுள்ளார். இதனை அவதானித்த இ.போ.ச பேரூந்தின் சாரதி அவ்விடத்தில் பேரூந்தினை நிறுத்தி இ.போ.ச பேரூந்தில் பயணித்த பயணி ஒருவர், நடத்துனர், சாரதி குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து இளைஞனும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியுள்ளார்.



இச் சம்பவத்தினால் காயமடைந்த இளைஞன், இ.போ.ச சாரதி, நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இருவரும் சமாதானமாக செல்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.