இலங்கையில் தேசிய சாதனை படைத்துள்ள யாழ். யுவதி!!

614

 

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில், மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் தமிழ் பெண்ணொருவர் தேசிய சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி அனிதா ஜெகதீஸ்வரன் என்பவரே இலங்கையில் இந்த தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதேவேளை கடந்த வருடம் நடைபெற்ற கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 3.48 மீற்றர் தூரத்திற்கு ஆற்றலை வெளிப்படுத்தி தேசிய சாதனை படைத்திருந்த அவர் இம்முறை அதனை 3.55 மீற்றராக உயர்த்திக் கொண்டு சாதனையை புதுப்பித்துள்ளார்.