பெற்ற பிள்ளைகளை கொன்றது ஏன் : இளம்தாயின் கண்ணீர் வாக்குமூலம்!!

308

தமிழகத்தில் பெற்ற பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடலூரின் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் பெரிய தெருவை சேர்ந்தவர் வினோத்(வயது 30), இவரது மனைவி சசிகலா(வயது 26). வினோத் உறவுக்கார பெண் தான் சசிகலா, இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில் வினோத் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு வரோகா(வயது 3), விஜயஸ்ரீ (3 மாதம்) என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

முதல் குழந்தை வினோத்தின் அம்மாவிடம் வளர்ந்து வந்துள்ளது.விஜயஸ்ரீ பிறந்து மூன்று மாதங்களே ஆனதால் குழந்தையுடன் அவரது தாய் வீட்டில் இருந்துள்ளார்.

குழந்தையும் அறுவை சிகிச்சை செய்து பிறந்த நிலையில், அடிக்கடி சசிகலாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.இதனால் மனவேதனையில் இருந்த சசிகலா, சிகிச்சைக்காக மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று சசிகலா தூக்குமாட்டி தற்கொலை செய்ய முயன்றார்.இதை பார்த்த அவரது அத்தை அலறித்துடிக்க, உடனடியாக ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றினார்.

அருகில் குழந்தைகள் இருவரும் இறந்து கிடந்ததை பார்த்ததும் உடனடியாக பொலிசுக்கு தகவல் அளித்தனர்.விரைந்து வந்த அதிகாரிகள் குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றியதுடன் சசிகலாவையும் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அவர் பொலிசிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், நானும், வினோத்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.இரண்டாவது குழந்தை பிறந்ததும் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது

.செரிமான பிரச்சனையாலும், தொடர்ந்து சாப்பிட முடியாமலும் அவதிப்பட்டு வந்தேன்.இதனால் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.

நான் இறந்த பிறகு குழந்தைகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக இப்படி செய்தேன் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.