ஐந்து நாள் இடைவெளியில் கணவரையும், குழந்தையையும் இழந்த பெண் : எடுத்த ஆச்சரிய முடிவு!!

758

பிரித்தானியாவில் கணவரையும், குழந்தையையும் ஐந்து நாள் இடைவெளியில் பறிகொடுத்த பெண், நபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தெற்கு வேல்ஸை சேர்ந்தவர் பவுல். இவர் மனைவி ரிஹியன் புர்க் (40). தம்பதிக்கு ஜார்ஜ் (1) என்ற மகன் இருந்த நிலையில் கடந்த 2012-ல் உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்தான். மகனின் இறப்பை தாங்கி கொள்ளாமல் மிகுந்த வேதனையில் ஆழ்ந்திருந்த பவுல், ஜார்ஜ் உயிரிழந்து ஐந்தாவது நாளில் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து ஐந்து நாள் இடைவெளியில் மகன் மற்றும் கணவரை இழந்த புர்க் அதிர்ச்சியில் உறைந்து போனார். ஆனால் மனம் தளராமல் வாழ்ந்து வந்த புர்க்கின் வாழ்க்கையில் கிரைக் மன்னிங்ஸ் (49) என்பவர் வந்தார்.

இருவரும் முதலில் நண்பர்களாக பழகிய நிலையில் பின்னர் காதலிக்க தொடங்கினர். இந்நிலையில் கிரைக்கை சமீபத்தில் புர்க் திருமணம் செய்து கொண்டுள்ளார். புர்க் கூறுகையில், நெருங்கிய உறவினர்கள் மட்டும் அறியும்படி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

எனக்கு மனதளவில் ஏற்பட்ட காயங்கள் மறைந்துவிடாது, ஆனால் சரியான நபர்கள் நம்முடன் வாழ்க்கையில் இருந்தால் இந்த வித கடினமான சூழலையும் சமாளிக்க முடியும்.

என் கணவர் கிரைக் கோடிகளில் ஒருவர், என் வாழ்க்கையையே அவர் மாற்றிவிட்டதோடு, என் வருங்காலத்தின் நம்பிக்கையாகவும் உள்ளார் என கூறியுள்ளார்.