அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்கும் : எச்சரிக்கும் ஈரான் ஜனாதிபதி!!

333

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருங்கள், இல்லையேல் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் ஜனாதிபதியான ஹசன் ரூஹானி சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கையில், கடந்த 2015-ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமா ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அதில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் நாங்கள் தெரிவித்திருந்தோம். இதன் காரணமாக எங்கள் நாட்டின் மீது இருந்த பொருளாதார தடைகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்று கூறி வருகிறார்.

ஈரான் அணு ஆயுத சோதனைகள் மேற்கொள்வதைத் தடுப்பதற்காக ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளையும் டிரம்ப் விதித்துள்ளதை குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்கா அதன் அணுஆயுத ஒப்பந்ததங்களில் உறுதியாக இல்லாவிட்டால் அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்கும் என ஹசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.