மாமியாரை கொலை செய்து தானும் தற்கொலை செய்த மருமகன்!!

373


மாமியாரைக் கொலை செய்துவிட்டு மருகன் தற்கொலை செய்துள்ள சம்பவமொன்று காலி- எல்பிட்டிய பிரசேத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் எல்பிட்டிய, பிட்டுவல வீதியின் விஜய மாவத்தையில் உள்ள வீடொன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



85 வயதுடைய லியனகே லீலாவதி என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 45 வயதுடைய ஜகன் கீர்த்தி அபேசேகர என்ற நபரே கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்.

குடும்பப் பிரச்சினையால் மருமகன் அவரைக் காலால் உதைத்த காரணத்தினாலேயே குறித்த பெண் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மாமியாரைக் கொலை செய்த பிறகு சந்தேகநபரான எனு வீட்டில் உள்ள அறையொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



பொலிஸ் அவசர இலக்கமான 119 இற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தியதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.