முல்லைத்தீவில் 15 வயதுடைய சிறுவனை காணவில்லை : பொலிஸில் முறைப்பாடு!!

302

முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவரை காணவில்லை என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சிறுவனின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த சிறுவன் கடந்த 22ஆம் திகதி உடையார்கட்டு பகுதியில் உள்ள கணனி கற்கை நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள சிறிய தந்தையின் வீட்டில் உணவருந்தி விட்டு 2 மணியவில் தனது வீட்டிற்கு செல்வதாக தெரிவித்து, புறப்பட்டுள்ளார்.

ஆனால் சிறிய தந்தையின் வீட்டில் இருந்து புறப்பட்ட சிறுவன் சுதந்திரபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வரவில்லை என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சத்தியசீலன் கிருஜன் என்பவரே காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.