தமிழ் வேண்டாம் என கூறிய ரசிகருக்கு சென்னை அணி நிர்வாகம் பதிலடி!!

408

தமிழில் பதிவுகள் வேண்டாம் என கூறிய ரசிகர் ஒருவருக்கு சென்னை அணி நிர்வாகம் பதிலடி கொடுத்துள்ளது.

11 ஆவது ஐ.பி.எல் போட்டி கடந்த 7 ஆம் திகதி மும்பையில் ஆரம்பமாகியுள்ளது. மும்பையில் ஆரம்பமாகிய போட்டி எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடைபெறும் போட்டியில் கடந்த 2 வருட தடைக்கு பின் பல ரசிகர்களை கொண்ட சென்னை அணி மீண்டும் களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னை அணிக்கு இந்தியாவில் மட்டுமல்லாது வேறு இடங்களிலும் ரசிகர்கள் உள்ளதால், தமிழில் மட்டும் பதிவிடாது, ஆங்கிலம் அல்லது ஹிந்தயிலும் பதிவிடுமாறு டுவிட்டரில் சென்னை அணி ரசிகர் ஒருவர் பதிவொன்றை இட்டுள்ளார்.

இதற்கு சென்னை அணி நிர்வாகம் ஆங்கிலம் சரி, ஆனால் ஹிந்தி கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும் என ஹிந்தியிலே பதிலடி கொடுத்துள்ளது.