சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் : ஏன் தெரியுமா?

502

எந்த விலங்கும் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காது, இயற்கையின் நியதியே அதுதான். ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் சாப்பிடும் போது தண்ணீர் அருந்துகிறோம் ஏன்? அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்? என்பதை இந்த பதிவு விளக்குகிறது.

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது, குடித்தால் உடலில் சத்துக்கள் ஒட்டாது என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். உடலுக்குத் தண்ணீர் தேவையென்றால், தாகம் எடுக்கும், அப்போது கண்டிப்பாகக் குடிக்கத்தான் வேண்டும், அது சாப்பிடும் நேரமாக இருந்தாலும் பரவாயில்லை.

உடலின் தேவையைப் பூர்த்திசெய்தே ஆக வேண்டும், இல்லையென்றால், தேவையில்லாத உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் என மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். இப்படி சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைப் பற்றி இருவேறு விதமாக பலர் சொல்வதை நாம் கேட்டிருப்போம், ஆனால் இதைப்பற்றி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

சாப்பிடும்போது கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது, அப்படிக் குடித்தால் ஜீரணக் கோளாறுகள் உண்டாகும்

நாம் பொறுமையாக அளவாகச் சாப்பிட்டால், தண்ணீர் குடிக்கவேண்டிய நிலை ஏற்படாது. ஆனால் சிலர் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் நீரை முழுவதுமாகக் குடிப்பார்கள்.

அப்படி சாப்பிட்ட உடன் நீரை முழுவதுமாகக் குடிக்கக் கூடாது, குறைந்தபட்சம் சாப்பிட்டப்பின் இருபது நிமிடங்கள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க ஆரம்பிக்கலாம். சாப்பிடுவதற்கு முன்னரும் குடிக்கக் கூடாது.

ஏனென்றால், வயிற்றுக்குத் தேவையான அளவு சாப்பிட முடியாது. அதோடு, உணவிலுள்ள சத்துக்கள் சரியாக உடலுக்குக் கிடைக்காது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாக தண்ணீர் குடிப்பது நல்லது.

நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமடைவதற்கு நம் உடலில் சில அமிலங்கள் (Hydrochloride and Dijestive Juices) சுரக்கும். சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் அந்த அமிலங்கள் நீர்த்துப் (Dilute) போகும்.

அதன் வீரியம் குறைந்து ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். இது தொடர்ச்சியாக நிகழும்போது, வயிறு தொடர்பான பிரச்னைகள் உண்டாகும்

சாப்பிடும்போது தாகம் எடுக்கிறதே, எப்படிக் குடிக்காமல் இருக்க முடியும்?’ என்பார்கள் சிலர். அப்படித் தாகம் எடுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நம் கடமை. அதற்கு, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக்கொள்ளலாம்.

உடலில் தண்ணீர் வற்றி, தொண்டை வறண்டு, தாகம் எடுக்கட்டும் என்று காத்துக்கொண்டிருக்கக் கூடாது. அப்படி உடலை வறட்சியாகவிட்டால் மலச்சிக்கல், சிறுநீரகக்கல் உருவாவது போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

ஒரே நேரத்தில் மொத்தமாகவும் தண்ணீர் குடிக்கக் கூடாது, ஒரு மணிநேர இடைவெளியில் ஒரு டம்ளர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடித்ததால் யாருக்கும் உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதில்லை.

ஆனால், குறைவாகக் குடிப்பதால் தான் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தண்ணீர் நம் உடலின் செல்களில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி, செல்களைப் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ள உதவும்.

தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் கழிவுகள் அப்படியே தங்கி, அவைதான் சிறுநீரகக் கற்களாக உருவாகின்றன.
சாப்பிடுவதற்கு அரை மணிநேரத்துக்கு முன்னர்வரை தண்ணீர் குடிக்கலாம், சாப்பிட்ட பிறகும் அரை மணிநேர இடைவெளி இருந்தால் மிகவும் நல்லது.