என்னை பலாத்காரம் செய்து காட்டுக்குள் வீசிவிட நடந்த சதித்திட்டம் : ஷமியின் மனைவி தகவல்!!

418

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி மனைவி ஹசின் ஜஹன் தனது கணவர் மீது அவ்வப்போது புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

முகமது ‌ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார், அவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து கொடுமைப்படுத்துகின்றனர், கொலை செய்யக்கூட முயற்சிக்கிறார்கள் என்று அவரது மனைவி ஹசின் ஜஹன் கொல்கத்தா பொலிசில் பரபரப்பான புகார் அளித்தார்.

இதையடுத்து ‌ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் பொலிசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ஏப்ரல் 23 ஆம் திகதி கத்துவா பகுதியில் 8 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை போன்றே தனக்கும் நடந்ததாவும், ஆனால் அச்சிறுமி இறந்துவிட்டார்.

நான், கடந்த 2 மாதங்களாக போராடி வருகிறேன் என கூறியுள்ளார். என்னை பலாத்காரம் செய்து, கொலை செய்த பின்னர் எனது உடலை காட்டுக்குள் வீசிவிட சதித்திட்டம் போட்டனர், ஆனால் நான் தப்பித்துவிட்டேன் என கூறியுள்ளார்.