வவுனியா வடக்கு வலயத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு நிகழ்வுகள் ஓமந்தை மத்திய கல்லூரியில் இன்று (03.05) கல்லூரியில் நடைபெற்றது.
வவுனியா வடக்கை சேர்ந்த 19 பாடசாலைகள் பங்குபற்றிய இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் கலந்துகொண்டு நிகழ்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
தேசியக்கொடி மற்றும் பாடசாலை கொடிகள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானதுடன் மாணவர்களது அணிநடையினை அதிதிகள் ஏற்றுக்கொண்டதுடன், ஒலிம்பிக் சுடரேற்றல் நிகழ்வை தொடர்ந்து வீரர்கள் மற்றும் நடுவர்களின் சத்தியப்பிரமாணம் எடுத்தல் நிகழ்வும் இடம்பெற்றது.
இவ்விளையாட்டுப் போட்டியில் கலாசார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன. விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருந்தினர்களால் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.