வவுனியாவில் பாடசாலைகளில் பலா மரக்கன்றுகள் : வன்னி பிரதி பொலிஸ் காரியாலயம் நடவடிக்கை!!

789

 

பாடசாலைகளில் பலா மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகா வித்தியாலயத்தில் வன்னி பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் இன்று (04.05) நடைபெற்றது.

வன்னி பிராந்திய சமூதாய பொலிஸ் பிரிவின் திட்டத்திற்கமைய வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களிலுள்ள 22 பொலிஸ் பிரிவுகளில், ஒரு பொலிஸ் பிரிவிற்கு 500 பலா மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 11 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகிறது.

வன்னி பிரதிபொலிஸ் மா அதிபர் மரக்கன்றினை நாட்டி 15வது பொலிஸ் பிரிவின் நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 50 மரக்கன்றுகளை பாடசாலை மைதானத்தை சூழவும் நாட்டினர்.

இந்நிகழ்வின் மூலம் பாடசாலை மாணவர்களிடம் மரங்களை வளர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் பொலிசாரினால் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.