மைதானத்தை தாக்கிய மின்னல் : பரிதாபமாக பலியான வீரர்!!

431

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதில் வீரர் ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் வாஷுலு நடால் என்ற இடத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது திடீரென கடுமையான மின்னல் தாக்கியது.

இதில் மாரிட்ஷ்பர்க் யுனைடெட் கால்பந்து கிளப் அணி வீரர்கள் 3 பேர் உடலில் தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டனர். இதனால் மயக்கமடைந்த அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் அணித்தலைவர் லுயாண்டோ நிஷான்கேஸ் ‘கோமா’ நிலைக்கு சென்றார். இந்நிலையில், தீவிர சிகிச்சையில் பிரிவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த தகவலை அவர் விளையாடிய மாரிட்ஷ் பர்க் கிளப் அணி உறுதி செய்துள்ளது.