வவுனியா இளைஞர் கழகத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியா மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.
சிறிசுமன விளையாட்டுக் கழகமும் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்திற்கும் நேற்று (06.05.2018) இறுதி கரப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
இப் போட்டியில் சிறி சுமன விளையாட்டு கழகத்தினை 2/1 புள்ளிகள் வித்தியாசத்தில் கூமாங்குளம் சுப்பர் ஸ்ரார் விளையாட்டு கழகம் வெற்றி பெற்று தேசிய ரீதியில் நடைபெறும் கரப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவாகியதது
இவர்கள் தொடர்ச்சியாக 5 வருடங்களாக தேசிய ரீதியில் நடைபெறும் கரப்பந்தாட்ட போட்டிக்குத் தெரிவாகி கூமாங்குளம் கிராமத்திற்கு மட்டுமன்றி வவுனியா மாவடத்திற்கே பெருமையினை தேடித்தந்துள்ளனர்.