இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடலொன்று சமூக ஆர்வலர் அருள்நாதன் நிருசா தலைமையில் இன்று (12.05) வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
மூவின மக்களும் வாழும் பிரதேசங்களில் அவர்களுக்கிடையில் பரஸ்பர உறவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இக்கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகிறது. முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் வழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கலந்துரையாடலின் நோக்கமாக இருக்கிறது.
கொழும்பிலும், வவுனியாவிலும் இன்றையதினம் சமகாலத்தில் இக்கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், நிகழ்வில் கலைஞர்கள், ஊடக மாணவர்கள் மற்றும் தொண்டர் ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.