பரபரப்பான போட்டியில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த டோனியின் மகள்!!

679


 

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது வீரர்கள் எந்த அளவிற்கு திரையில் காட்டப்பட்டார்களோ அந்த அளவிற்கு போட்டியை பார்க்க வந்த வீரர்களின் மனைவிகளும் திரையில் காண்பிக்கப்பட்டனர்.



ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் போது டோனி தலைமையிலான சென்னை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.
பரபரப்பாக சென்ற இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியை பார்ப்பதற்கு சுரேஷ் ரெய்னா மனைவி பிரியங்கா, ஹர்பஜன் சிங் மனைவி கீதா பஸ்ரா, டோனி மனைவி சாக்‌ஷி ஆகியோர் தங்கள் மகள்களுடன் வந்திருந்தனர்.



சுரேஷ் ரெய்னா மகள் கிரேஸியா, ஹர்பஜன் சிங் மகள் ஹினயா, டோனி மகள் ஜிவா ஆகியோர் போட்டி நடந்து கொண்டிருந்த போது ஒவ்வொரு ரியாக்‌ஷன் கொடுத்தனர்.



அதிலும் குறிப்பாக டோனியின் மகளான ஜீவா போட்டியின் பரபரப்பான கட்டத்தின் போது, அம்மா சாக்‌ஷியிடம் கூலாக விளையாடிக் கொண்டிருந்தார்.


இதைக் கண்ட வர்ணனையாளர்கள் பரபரப்பு மத்தியில் ஒரு அழகான விளையாட்டு என்று கூறி, அடிக்கடி அவர்களை மைதானத்தில் இருந்த பெரிய திரையில் காண்பித்து கொண்டிருந்தனர்.

அப்படி எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.