20 வயதான இளம் பெண்ணின் பலவருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம் : அதிர்ச்சிப் புகைப்படங்கள்!!

384

 

பல வருடங்களாக தனது தலை முடியை உண்ண பழகிய இளம் பெண் ஒருவருக்கு மேற்கொண்ட அறுவைச் சிகிச்சை தொடர்பில் வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இந்தியா – மும்பை ராஜ்வாஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையொன்றில் இந்த அறுவைச் சிகிச்சை இடம்பெற்றுள்ளது.

20 வயதான இந்த இளம்பெணுக்கு குறித்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவரின் வயிற்றில் இருந்த 2 இரத்தால் முடி அகற்றப்பட்டுள்ளது.இந்த பெண்ணுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ள போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சத்திரச் சிகிச்சைக்கு முன் இந்த பெண் 66 இராத்தல் நிறையுடையவராக இருந்ததாக சத்திரச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு தமது தலை முடியை உண்பது, ரிபேன்சல் சின்ரம்ஸ் என்ற மனநோய் என மன நல மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ள முடியின் நீளம் 10 அங்குலமும், அதன் அகலம் 4.7 அங்குலமும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி மாதம் இந்த சத்திரச் சிகிச்சை இடம்பெற்றுள்ள நிலையில், அந்த இளம்பெண் தற்போது நலமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.