அவரால் தினமும் அழுதேன், அந்த இயக்குனரை வெட்டி கொல்ல வேண்டும் : சரண்யா பொன்வண்ணன்!!

392

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்தது என்றால் சரண்யா பொன்வண்ணன் தான். அந்த அளவிற்கு அம்மா கதாபாத்திரம் என்றாலே இவர் தான் நம் நினைவிற்கு வருவார்.

இவர் நடிப்பில் யாராலும் மறக்க முடியாத படம் என்றால் தவமாய் தவமிருந்து தான். இப்படத்திற்காக இவரை பாராட்டாதவர்கள் இல்லை.அந்த அளவிற்கு சிறப்பாக நடித்திருப்பார், ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பின் போது இவருக்கும், சேரனுக்கும் தினமும் சண்டை தான் நடக்குமாம்.

ஏன் என்றே காரணம் தெரியாமல் சண்டை வருமாம், தினமும் படப்பிடிப்பில் அழுவாராம், ஒரு கட்டத்தில் சேரனை வெட்டி கொல்ல வேண்டும் என்று கூட நினைத்துள்ளாராம் சரண்யா.மேலும், அந்த படத்தில் நடித்தது மிகவும் மோசமான நாட்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் அந்த படப்பிடிப்பு முடிந்த அடுத்த நாளே நானும் சேரனும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம்.அது எப்படியென்றே தெரியவில்லை, இன்று வரை அவரை பார்த்தால் எனக்கு சிரிப்பு வந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.