வவுனியாவில் நாளை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் கவனயீர்ப்புப் போராட்டம்!!

326

வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக நாளைய தினம் (16.05.2018) 9 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இக் கவனயீர்ப்புப் போராட்டமானது வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இப் போராட்டமானது 35 வயதிற்கு மேற்பட்டவர்களை நியமனங்களில் உள்ளீர்க்க வேண்டும், 2017 வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் உள்வாங்குதல் வேண்டும், பட்ட சான்றிதழ் இறுதித் திகதியினடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்படுதல் வேண்டும்,

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படுவதோடு, கொழும்பில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்கு எதிராக வேலையற்ற பட்டதாரிகள் மீது நீர்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை கண்டித்தும் நாடளாவியரீதியில் நாளை நடைபெறும் எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட 35 வயதிற்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் நாளைய தினம் சேகரிக்கப்பட்டு உரிய அமைச்சுக்கு பெயர் விபரங்கள் வழங்கப்படவுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு தொழில் உரிமைக்கு வலுச்சேர்க்குமாறு வவுனியா வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.