வவுனியாவில் பகலில் வயோதிபப் பெண்ணிடம் மயக்க மருந்தை தூவி நகைகள் கொள்ளை!!

434

வவுனியா பஜார் வீதியில் பொருட் கொள்வனவிற்காக சென்ற வயோதிப பெண்ணிடம் மயக்க மருந்தை தூபி அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணம் என்பற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (15.05) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பஜார் வீதியில் உள்ள கடையொன்றில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நடந்து சென்ற வயோதிப பெண்ணிடம் கைக்குட்டையில் சுற்றப்பட்டிருந்த கல் ஒன்றினை காட்டி அது தொடர்பாக பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் வினவியுள்ளனர்.

குறித்த பெண்மணியும் அவர்களிற்கு பதில் கூற முற்பட்ட போது குறித்த கைக்குட்டையினை திடீரென முகத்தில் அழுத்தி மயக்கமடைய செய்து அவர் அணிந்திருந்த நான்கரைப் பவுண் தங்கச்சங்கிலி, ஒன்றரைப் பவுண் மோதிரம், கைப்பையில் இருந்த எண்பதாயிரம் ரூபா பணத்தினையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் குறித்த பகுதியில் உள்ள சிசீரீவி கமராக்களில் உள்ள பதிவுகளை பொலிஸாரினால் பார்வையிடப்பட்டு வருகின்றனர்.

இக்கொள்ளை தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றது.