வெளிநாட்டிலுள்ள 32000 இலங்கையர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்!!

341


வெளிநாட்டில் வாழும் 400 குடும்பங்களை சேர்ந்த சுமார் ஆயிரம் இலங்கையர்களுக்கு இன்று இரட்டை குடியுரிமை வழங்கப்படவுள்ளது. பத்தரமுல்லை, இசுருபாயவில் அமைந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இந்த நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படுகின்றது.



அமைச்சர் எஸ்.பி.நாவின்னவின் தலைமையில் இரட்டை குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 3 வருடங்களுக்குள் வெளிநாட்டில் உள்ள 32000 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழஙகப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஜெனரல் தெரிவித்துள்ளார்.



உலகளாவிய ரீதியில் இலங்கை உள்ளிட்ட 17 நாடுகளில் இரட்டை குடியுரிமை வழங்கும் நடைமுறை உள்ளமை குறிப்பிடத்தக்கது.