பரந்தன் வீதியில் விபத்து : மூவர் காயம்!!

364

யாழிலிருந்து பூநகரி நோக்கிச்சென்ற வாகனம் ஒன்று இன்று (16.05) பரந்தன்- பூநகரி வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிக வேகத்துடன் பயணித்த வாகனம் சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் வாகனத்தில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்து சாரதியின் அவதானமின்மை காரணமாக நிகழ்ந்துள்ளதுடன் வடக்கில் இதுபோன்ற விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.