தமிழகத்தில் இருந்து கள்ளத்தனமாக இலங்கை சென்ற அகதி குடுமத்தினருக்கு ஏற்பட்ட நிலை!!

299

தமிழகத்தில் இருந்து எந்த வித ஆவணமுமின்றி கள்ளத்தனமாக இலங்கைக்கு திரும்பிய நான்கு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலிலிருந்து அகதிகளாகத் தப்பிவந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் அகதிகளாக தங்கி வருகின்றனர்.

இந்த முகாம்கள் அகதிகளுக்கு ஓரளவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்தியக் குடியுரிமை கிடையாது. அதுமட்டுமின்றி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த முகாம்களில் வாழ்ந்து வரும் இவர்கள், தற்போது இலங்கையில் போர் ஓய்ந்து அமைதி நிலவுவதால் தற்போது இங்கிருப்பவர்கள் தங்க்ள் தாயகத்திற்கு திரும்பி வருகின்றனர்.

அப்படி திரும்பும் சிலர் இந்திய, இலங்கை அரசுகளின் முறையான அனுமதியுடனும், சிலர் எந்த வித அனுமதியுமின்றியும் இலங்கைக்கு திரும்புகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2006-ஆம் ஆண்டு இலங்கை திருகோணமலை பகுதியிலிருந்து அகதிகளாக வந்து தமிழக முகாமில் தங்கியிருந்த சஜன், சந்திரலேகா, சாதனா மற்றும் 11 மாத கைக்குழந்தை ஆகியோர் இலங்கையைச் சேர்ந்த படகு ஒன்றின் மூலம் இலங்கை கடல் பகுதியில் பயணித்துள்ளனர்.

அப்போது இவர்களை பார்த்த இலங்கை கடற்படையினர் படகை வழிமறித்து விசாரணை மேற்கொண்ட போது, அவர்களிடம் எந்த வித ஆவணமின்றி கள்ளத்தனமாக வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் அகதிகள் 4 பேர் மற்றும் இலங்கை படகோட்டிகள் 2 பேர் உள்ளிட்ட 6 பேரையும் காங்கேசன்துறை பொலிசாரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். பொலிசார் விசாரனைக்குப் பின் இவர்கள் அனைவரும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.