இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் ஜெயவர்த்தனவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

512

இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரான மஹேல ஜெயவர்த்தனவின் சொத்து மதிப்பு 4 மில்லியன் டொலர் ஆகும். இவர் 1997ம் ஆண்டு ஆகஸ்டு 26ம் திகதி அன்று இலங்கை- இந்தியா இடையே கொழும்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார்.

1998ம் ஆண்டு ஜனவரி 24ம் திகதி அன்று ஜிம்பாப்வே – இலங்கை இடையே கொழும்புவில் நடைபெற்ற போட்டியிலும், 20 ஓவர் போட்டியிலும், பின்னர் 2004ம் ஆண்டு ஆகஸ்டு 14ம் திகதி அன்று பர்கெர் ரெக்ரியேஷன் கிளப்- சிங்களஸ் போர்ட்ஸ் கிளப் இடையே கொழும்புவில் நடைபெற்ற போட்டியிலும் விளையாடினார்.

தனது சிறப்பான ஆட்டத்தில் காரணமாக அதிக விருதுகளை இவர் பெற்றுள்ளார். குறிப்பாக 2006 ஆம் ஆண்டில் சிறந்த அணித்தலைவர் விருது ஐசிசியால் வழங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் Wisden Cricketer, 2013 ஆம் ஆண்டில் ஐசிசி spirit விருது வழங்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 2012 ஆம் ஆண்டு இவருக்கு இலங்கை கிரிக்கெட் சபையால் 120,750 டொலர் ஊதியமாக வழங்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சார்பில் 1.4 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். மீண்டும் 2015 ஆம் ஆண்டு 1.5 மில்லியன் டொலர் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

2016 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இவர் எடுக்கப்படவில்லை. இவரது வருமானம் மற்றும் தனிப்பட்ட தொழில்கள் மூலம் இவரது சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. இவர் கொழும்பில் Seafood உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அதுமட்டுமின்றி, இவர் அதிக நிறுவனங்களின் விளம்பரதூதுவராக இருந்துள்ளார். DSI Holdings Ltd, Reebok, Mobitel குறிப்பிடத்தக்கன. இவற்றின் மூலம் இவர் ஈட்டிய சொத்து மதிப்பு 4 மில்லியன் டொலர் ஆகும்.