பிரித்தானியாவில் இளம் பெண் படுகொலை : வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட கொடுமை!!

370

பிரித்தானியாவில் இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர். Middlesbrough நகரை சேர்ந்தவர் ஜெசிகா படேல் (34) இவர் தனது கணவருடன் சேர்ந்து மருந்தகத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஜெசிகா தனது வீட்டில் படுகாயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் குற்றவாளியை தேடி வந்த நிலையில் இதில் தொடர்புடைய 36 வயது நபரை தற்போது கைது செய்துள்ளனர்.

அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து இனி தான் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.