ஈரானில் காளான் உணவு சாப்பிட்ட 800 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காளான் உணவு சாப்பிட்ட 11 பேர் உடல் நலக்குறைவால் இறந்து போயுள்ளனர்.
ஈரானின் 10 மாகாணங்களில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. ஆனால் குறித்த விஷத்தன்மைக்கு உரிய சிகிச்சை ஈரானில் இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மட்டுமின்றி காளான் உணவு சாப்பிட்ட இருவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மேலும் குறித்த காளானை பொதுமக்கள் வாங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரானில் உள்ள மலைப் பிரதேசங்களில் வளரும் ஒருவகை காளானே விஷத்தன்மை கொண்டதாக உள்ளது. திடீரென்று பெய்த மழை காரணமாக குறித்த விஷத்தன்மை மிகுந்த காளான் தோன்றியுள்ளதாகவும், இதை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.