வவுனியா சேக்கிழார் மன்றத்தின் 10 வருட நிறைவு விழா!!

343

வவுனியா சேக்கிழார் மன்றத்தின் 10 ம் வருட நிறைவு விழாவை முன்னிட்டு மாணவர்களிற்கான ஆக்கத்திறன் போட்டிகள் 20.05.2018 அன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் சேக்கிழார் மன்றத்தின் தலைவர் ஜ.ஜயம்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.

சைவ சமயத்திற்கு புதிய பரிணாமத்தை தேடி தந்த, பக்தி நெறியின் மேன்மையை பாரறியச்செய்த சேக்கிழார் பெருமானது வரலாற்றயும், பெருமைகளையும் எதிர்கால சமுதாய சிற்பிகளான இளம் சந்ததியினரின் உள்ளத்தில் பதிய வைக்கும் நோக்குடன் பாடசாலைகளிலும், அறநெறி பாடசாலைகளிலும் கற்கும் மாணவர்கள் மத்தியிலும் குறித்த போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டிநிகழ்வுகளாக பேச்சு, கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி, திருமுறை மனனப் போட்டி, வில்லிசைப்போட்டி போன்ற பிரிவுகளில் நிகழ்வுகள் நடைபெற்றன.