வவுனியாவில் படையெடுக்கும் பாத்தீனியம் : நடவடிக்கை எடுப்பார்களா உரியவர்கள்!!

473

வவுனியாவில் பல்வேறு இடங்களிலும் பாத்தீனியம் படையெடுத்துக் காணப்படுகினறது. இதனை அழித்தொழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறிப்பாக பாடசாலைகள் செல்லும் வீதிகளிலும், பிரதான வீதிகள், குளக்கட்டுப்பகுதிகள், கோவில்கள் வழிபாட்டுத்தளங்கள், போன்ற மிகவும் முக்கிய மக்கள் ஒன்று கூடும் இடங்களிலும் இச் செடிகளை காணக்கூடியதாக உள்ளது.

இதனைக்கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த காலங்களில் அதிக முக்கியத்துவம் வழங்கி பத்தீனியத்தைக்கட்டுப்படுத்த பல நடவடிக்கையினை மேற்கொண்டுள்ள வடமாகாண சபை இவ்விடயத்தில் தற்போது கவனமற்றுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

பல பகுதிகளிலும் பாத்தீனியத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு விழிப்புணர்வு விளம்பரப் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டபோதிலும் அதனை கட்டுப்படுத்தி அழித்தொழிப்பதற்கு போதியளவில் முக்கியத்துவம் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பாத்தீனியம் அதிகம் காணப்படும் இடங்களை அப்பகுதியிலுள்ள கிராம அபிவிருத்திச்சங்கம், பொது அமைப்புக்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பாடசாலைச்சமூகம் ஒன்றிணைந்து இவற்றை அழித்தொழிப்பதற்கு முன்வருமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.