வவுனியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

320


 

எரிபொருள், அத்தியவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் இன்று (23) வவுனியாவில் நடைபெற்றது.



சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் யூ.அயூப்கான் தலைமையில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், எரிபொருள், அத்தியவசிய பொருட்களின் விலையேற்றத்தை உடனடியாக குறை, மக்களை பட்டினியில் போடும் பொருளாதாரக்கொள்கையை கைவிடு, அமைச்சர்களே! பாராளுமன்ற உறுப்பினர்களே! மக்களின் பணத்தில் சுகபோக வாழ்க்கை வாழாதே,



பெண்களின் வாழ்வுரிமையை சிதைக்கும் சாராயக்கடைகளை இழுத்து மூடு, மக்களையும் நாட்டையும் அடகு வைக்காதே, பொருட்களை விலையேற்றி மக்களின் வயிற்றில் அடிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கி நின்றனர்.