வவுனியாவில் பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு : ஒருவர் கைது!!

339

வவுனியா கட்டமஸ்கட மலையடி பருத்திக்குளம் பகுதியில் பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாமடு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ஜி.எஸ்.கே.செனரத் தெரிவித்தார்.

மலையடி பருத்திக்குளம் பகுதியில் அமைந்தள்ள கற்குவாரியிலிருந்து ஆயிரத்து ஏழு கிலோகிராம் அமோனியா வெடி மருந்துகளும், 774 டெட்டிநேற்றர்களும், 306 ஜெலக்நைற் குச்சிகளும், மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் அனுராதபுரம் பகுதியைசேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிசார்,

பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மடுக்கந்த விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

சந்தேகநபரை நாளை (24.05) நீதிமன்றத்தில் முன்னிறுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாமடுவ பொலிசார் மேலும் தெரிவித்தனர்.