வவுனியாவில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!!

406

வவுனியா, தம்பனை பிரதேசத்தில் காட்டு விலங்குகளுக்காகப் பயன்படுத்தப்படும் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் காட்டுப்பகுதிக்கு வேட்டைக்குச் சென்றவேளை, விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு தவறுதலாக வெடித்ததாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் தம்பனை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ரவிச்சந்திரன் (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.