சண்டையை விலக்கிவிட வந்த நபரின் காதை கடித்து விழுங்கிய நபர் : அதிர்ச்சி சம்பவம்!!

546

இந்தியாவில் குடித்துவிட்டு போதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த வந்தவரின் காதை கடித்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்தவர் ஜிதேந்தர் குமார். டிரைவரான இவர் இரவு வீட்டுக்குச் செல்லும் போது சுல்தான்பூர் சாலையில் இரண்டு பேர் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளதைக் கண்டுள்ளார்.

இதனால் அவர் உடனடியாக அவர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் சண்டையிட்ட நபர்களில் ஒருவன் ஆத்திரத்தில் ஜிதேந்தர் குமாரின் காதை கடித்துள்ளார்.

அப்போது காது துண்டாகிய நிலையில், எதிர்பார்தவிதமாக காதை கடித்த நபரே அதை விழுங்கியுள்ளார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜிதேந்தர் குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பின் இந்த சம்பவத்தை அறிந்து மருத்துவமனைக்கு வந்த பொலிசார், ஜிதேந்தகுமாரிடம் விசாரணை மேற்கொண்டு அதன் பின் இந்த சமப்வத்திற்கு காரணமான சந்தோஷ் (43) மற்றும் தீபக் (23) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இவர்கள் மேல் இந்திய தண்டனைச் சட்டம் 324 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.