வவுனியா நகரப்பிரதேச முன்பள்ளிகளின் மழலைகள் விளையாட்டு விழா!!

542

 

வவுனியா நகரப்பிரதேச முன்பள்ளிகளின் மழலைகள் விளையாட்டு விழா நேற்று (24.05.2018)
கூமாங்குளம் சுப்பார் ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் திருமதி.M.பத்மகலைவாணி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக (முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் வவுனியா தெற்கு வலையம்) திரு.K.தர்மபாலன், சிறப்பு விருந்தினராக S.பாலச்சந்திரன் (சித்தி விநாயகர் வித்தியாலய அதிபர்), முன்னாள் கோட்ட இனணப்பாளர் திருமதி அருள்வேல்நாயகி ஆகியோரும்,

கௌரவ விருந்தினராக M.அதிஸ்டசெல்வம் (பிரதேச சபை உறுப்பினர்), திருமதி V.சசிகலா (கோட்ட இணைப்பாளர்),  திருமதி S.சுஜனிதா (கிராம சேவையாளர்), J.தியாகசெல்வம் (சுப்பர் ஸ்ரார் வி.கழகம்) , N.ஸ்ரீரீதரன், M.குருசாமி (லட்சுமணன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர்) மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்

-பிரதீபன்-