வடமாகாணம் முழுவதும் 2 நாட்கள் மின்தடை!!

426

வடக்கு மாகாண முழுவதும் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமையும், 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் வழங்கல் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம், வவுனியா, மன்னார் மின்மார்க்கத்திலுள்ள திருத்த வேலைகள் காரணமாக இந்த மின் தடை ஏற்படும் என்று இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமையும், 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் வழங்கல் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.