இலங்கை பிரபல கிரிக்கட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை!!

446


இலங்கையில் பிரபல கிரிக்கட் வீரர் தனன்ஜய டி சில்வாவின் தந்தையான கே. ரஞ்சன் சில்வா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.



கல்கிஸ்ஸ பிரதேசத்தில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ரஞ்சன் சில்வா உயிரிழந்துள்ளார். ரஞ்சன் சில்வா தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகரசபையின் உறுப்பினராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்மலானை ஹரேந்திர வீதியில் வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.



துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய மூன்று பேரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், ரஞ்சன் சில்வா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



இந்த சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, தனன்ஜய டி சில்வா இன்று மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியில் இணைந்திருந்தார்.


தந்தையின் மரணம் காரணமாக இந்த கிரிக்கட் சுற்றுப் பயணத்தில் தனன்ஜய டி சில்வா இணைந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தேசிய அணியின் வளர்ந்து வரும் முன்னணி வீரர்களில் ஒருவராக தன்னஜய டி சில்வா திகழ்கின்றார்.