சீரற்ற காலநிலை இன்றைய தினமும் தொடரும்!!

319

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை இன்றைய தினமும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளுக்கு பிற்பகல் வேளையில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் தென் கடற்பரப்பில் மழை பெய்யும் எனவும் இன்று முதல் காற்றின் வேகமும் அதிகரிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது