வவுனியாவில் புதையல் தோண்டச் சென்ற 5 பேர் கைது!!

547

வவுனியா பம்பைமடுப் பகுதியில் நேற்று (24.05) புதையல் தோண்டுவதற்குச் சென்ற 5பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ஸ்கானர், முச்சக்கரவண்டி, கார் என்பனவற்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை 5 மணியளவில் பம்மைமடு காட்டுப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டியினை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்கானர் ஒன்றை மீட்டுள்ளதுடன் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது காரில் வந்த இருவரையும் முச்சக்கரவண்டியில் சென்ற மூவரையும் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டபோது,

தென்பகுதியிலிருந்து வந்த மூவருடன் வவுனியா பட்டாணிச்சூர் பகுதியைச் சேர்ந்த இருவரும் இணைந்து புதையல் தோண்டுவதற்குச் சென்றதாக விசாரணைகளின்போது தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐவரும் முஸ்லிம்கள் என்பதுடன் முன்னாள் மௌலவி ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.