லண்டனில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் : வெளியான அதிர்ச்சிப் புகைப்படங்கள்!!

540


லண்டனில் தங்கள் குழந்தையை கவனித்து கொள்வதற்காக வந்த பெண் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவதற்குமுன் எடுக்கப்பட்ட அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

லண்டனில் வசிக்கும் Sabrina Kouider மற்றும் அவரது ஆண் நண்பரான Ouissem Medouni இருவரும் தங்கள் மகனைப் பார்த்துக் கொள்வதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Sophie Lionnet என்னும் இளம்பெண்ணை வேலைக்கு சேர்த்திருந்தனர்.



Sabrina இல்லாதவற்றை இருப்பதுபோல் கற்பனை செய்து கொள்ளும் ஒரு வகை பிரச்சனை உடையவர். அந்த பிரச்சனை பின்னர் வேலைக்கு வந்த Sophie Lionnetஇன் உயிரையே பறித்துள்ளது.

Sabrinaவுக்கு முன்னாள் காதலன் ஒருவர் இருக்கிறார். அவர் Sophie Lionnetஇன் மூலம் தன்னை உளவு பார்ப்பதாக கற்பனை செய்து கொண்ட Sabrina, அது குறித்து கேட்டு அவ்வப்போது Sophieயை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்.



அந்த நபரை தனக்கு தெரியவே செய்யாது என்று Sophie எவ்வளவோ கூறியும் கேட்காத Sabrina Kouiderவும் அவரது ஆண் நண்பரான Ouissem Medouniயும் சித்திரவதை செய்துள்ளனர்.



ஒரு நாள் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்தும் அடித்து உதைத்தும் சித்திரவதை செய்ததில் Sophie பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை தங்கள் தோட்டத்தில் வைத்தே எரித்துள்ளனர் அந்த தம்பதியினர்.


ஆனால் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் பிண வாடை அடிப்பதை உணர்ந்து பொலிசாருக்கு தகவல் கொடுக்க வசமாக சிக்கிக் கொண்டனர்.

தற்போது கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்குமுன் எடுக்கப்பட்ட Sophieயின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பட்டினி போடப்பட்டதால் மெலிந்து எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறார் Sophie.


இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, Sophieயின் பெற்றோரிடம் Sophie மீது அவளைக் கொலை செய்தவர்கள் கூறிய குற்றங்கள் எதுவும் உண்மையில்லை என்றும் அவள் ஒரு நிரபராதி என்றும் கூறி ஆறுதல் கூறினார்.

Sophieயின் தாய் கண்ணீர் விட்டுக் கதறிய காட்சி கண்போரை கலங்கச் செய்தது. ஜூன் மாதம் 26 ஆம் திகதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.