வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞனின் கால் துண்டிப்பு!!

467

வவுனியா ஓமந்தைப் பகுதியில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவரின் கால் துண்டித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று பிற்பகல் ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பல்சர் ரக மோட்டார் சைக்கிலுடன் டிப்பர் வாகனம் மோதியுள்ளது.

இவ்விபத்தில் இளைஞனின் கால் ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துண்டிக்கப்பட்ட காலினை பொலிசார் 15 நிமிடங்களின் பின்னர் வைத்தியசாலைக்கு எடுத்து வந்து ஒப்படைத்துள்ளனர்.

செட்டிகுளம் பகுதியில் 2ஆம் படிவத்தில் வசித்துவரும் பாலசுந்தரம் நிரோசன் (வயது 22) யாழ்ப்பாணம் செல்வதாகத் தெரிவித்துவிட்டு சென்றபோதே ஓமந்தையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

டிப்பர் வாகனம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளையில் சாம்பல் தோட்டம் பகுதியில் மோட்டார் சைக்கிலிள் சென்ற குடும்பப் பெண் ஒருவரை பின்னால் சென்ற ஹயஸ் வான் மோதியதில் தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாம்பல் தோட்டம் பகுதியைச் சேர்ந்த எஸ்.வாணதி என்ற (வயது 40) இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்துகள் தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.