ஒரு விக்கெட்டுக்கு ஒரு கோடி வாங்கிய ஐபிஎல் வீரர்!!

407

இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் ஒருவர் தான் ஜெயதேவ் உடன்கட். ராஜஸ்தான் அணி இவரை 11.5 கோடிக்கு விலைக்கு எடுத்தது.

இவரையே பந்து வீச்சில் அதிகம் நம்பியிருந்தது. ஆனால் ராஜஸ்தான் அணிக்கு 15 போட்டிகள் விளையாடியுள்ள இவர் 11 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார்.

இதை கணக்கில் வைத்து பார்த்தால் அவர் ஒரு விக்கெட்டிற்கு 1 கோடி என்ற அளவிற்கு வாங்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி இவருடைய பந்து வீச்சின் சராசரி 44.18 என்ற மோசமான சராசரியை வைத்துள்ளார். நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் ஒரு ஓவருக்கு சராசரி 16.50 ஓட்டங்களை வாரி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.