மனைவி உயிரிழந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரி!!

268

மனைவி உயிரிழந்ததை தாங்கிக்கொள்ள முடியாத பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று கொகருல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொகருல்ல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கான்ஸ்டபில் ஒருவரே நேற்று மாலை இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட கான்ஸ்டபிலின் மனைவி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். வாகன விபத்தொன்றில் சிக்கி சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், மனைவி உயிரிழந்த தகவல் கிடைத்ததை தொடர்ந்து தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டுக்கொண்டு பொலிஸ் கான்ஸ்டபில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.