ச்சீ த்தூ : என் கணவரை பூரிக்கட்டையாலே அடிச்சிருப்பேன் : நடிகை ஆர்த்தி ஆவேசம்!!

363

நெஞ்சை நிமிர்த்தி நிற்காதீங்க… நீங்க சுட்டுக் கொன்றது உங்க அண்ணன், தம்பி, தங்கச்சிகளை… ச்சீ த்தூ!’ என தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிராக நடிகை ஆர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த துப்பாக்கி சூட்டிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்ட நடிகை மீது வழக்குபதிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இவர், கருத்துச் சொல்றவங்களை வழக்கு போடுவோம்னு சொல்லி மிரட்டுறதெல்லாம் பண்ணட்டும், எத்தனை நாளைக்குப் பண்றாங்கனு பார்க்கலாம்.

அம்மாவோட குணம், ஆளுமை, தைரியத்தைப் பார்த்து நான் அதிமுகவில் சேர்ந்தேன். அவங்க எப்போ மறைஞ்சாங்களோ, அப்பவே நானும் அந்தக் கட்சியில இருந்து விலகிட்டேன்.

ஒரு தொலைக்காட்சி நடிகை வீடியோ வெளியிட்டா வழக்கு போடுறீங்களே, பெரிய ஆளுங்க எத்தனைபேர் இது பற்றிக் கருத்து சொல்லியிருக்காங்களே, அவங்கமேலேயும் வழக்கு போடுங்களேன்.

அம்மாவின் கட்சி என சொல்லிக்கொண்டு இத்தனை பேரை கொன்று குவிச்சிருக்காங்க, மேலும் என் கணவர் பாஜகவில் இருந்திருந்தா, அவர் வீட்டுல இருக்க முடியாது. பூரி தேய்க்கிற கட்டையைக் கொண்டே அடிச்சு மண்டையை உடைச்சிருப்பேன்.

என்னை மாதிரி அவரும் இப்போ எந்தக் கட்சியிலேயும் இல்லைங்க. பாரதிய ஜனதாவுல போய்ச் சேர்ந்தது உண்மைதான். ஆனா, அந்தக் கட்சியோட நடவடிக்கைகள் பிடிக்காததுனால ஒதுங்கிட்டார்.