தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்தக்கோரி உயிரை விட்ட பாடசாலை மாணவன்!!

328

குடிப்பழக்கத்தை தந்தை விட மறுத்ததால் 9ம் வகுப்பு பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை சேர்ந்தவர் பிரகாஷ் (38). இவர் மனைவி பேபி (34). தம்பதிக்கு ஹரிஹரன் (14) என்ற மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான பிரகாஷ் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பேபியுடன் சண்டை போட்டுள்ளார். மது குடிப்பதை பிரகாஷ் நிறுத்த வேண்டும் என பேபியும், ஹரிஹரனும் அவரிடம் பலமுறை கெஞ்சியும் கேட்கவில்லை.

இந்நிலையில் பிரகாஷ் வழக்கம்போல நேற்று குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.

இதனால் விரக்தியடைந்த அவர் மகன் ஹரிஹரன் அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் ஹரிஹரன் சடலத்தை கைப்பற்றி விட்டு இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.