வவுனியாவில் வீதியினை விட்டு விலகி பேரூந்து விபத்து!!

347

வவுனியா செட்டிக்குளம் இலுப்பைக்குளம் பகுதியில் இன்று (26.05.2018) காலை இ.போ.ச பேரூந்து வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. எனினும் பேரூந்தில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

செட்டிக்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துப் சபைக்கு சொந்தமான பேரூந்து வீதியின் சிரற்ற நிலை காரணமாக வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இதன் போது பேரூந்தில் பயணம் மேற்கொண்டிருந்த பயணிகளுக்கு எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை.

இவ் வீதியில் சிரற்ற தன்மையே இவ் விபத்திற்கு காரணமாகவும் தினசரி 100க்கு மேற்பட்டவர்கள் இவ் வீதியுடாகவே வவுனியா நகரத்திற்கு சென்றுவருகின்றனர். மீண்டுமோரு விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு முன் வீதியினை செப்பனிட்டு தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.